Begin typing your search above and press return to search.
குமரியில் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் பதவி ஏற்றனர்
குமரியில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் பதவி ஏற்று கொண்டனர்.
HIGHLIGHTS
தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் முடிவுகள் கடந்த பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் 52 வார்டுகளை கொண்ட நாகர்கோவில் மாநகராட்சி உட்பட நகராட்சி, பேரூராட்சிகளில் பல்வேறு கட்சிகள் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு தேர்தல் முடிவு அறிவித்த உடனேயே வெற்றி சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இந்நிலையில் நாகர்கோவில் மாநகராட்சி மற்றும் நகராட்சிகள், பேரூராட்சிகள் உறுப்பினர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர்கள் இன்று பதவி ஏற்று கொண்டனர்.