/* */

குமரியில் மகா சிவராத்திரியை முன்னிட்டு மார்ச்.1ம் தேதி உள்ளூர் விடுமுறை

கன்னியாகுமரி மாவட்டத்தில் மகா சிவராத்திரி முன்னிட்டு மார்ச் 1ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

HIGHLIGHTS

குமரியில் மகா சிவராத்திரியை முன்னிட்டு மார்ச்.1ம் தேதி உள்ளூர் விடுமுறை
X

மகா சிவராத்திரியை வெகு விமரிசையாக கொண்டாடும் மாவட்டங்களில் கன்னியாகுமரி மாவட்டமும் ஒன்று.

இந்த நாளில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 103 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள 12 சிவாலயங்களை பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா, கோபாலா என்ற கோசத்துடன் ஓடியே சென்று வழிபடுவது வழக்கம்.

இதனிடையே மகா சிவராத்திரி திருநாளை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வரும் மார்ச்.1 ஆம் தேதி செவ்வாய்கிழமை உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டு உள்ளது. உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் வரும் 12 ஆம் தேதி சனிக்கிழமை வேலைநாளாக செயல்படும்.

இந்த உள்ளூர் விடுமுறை செலாவணி முறி சட்டம் படி அறிவிக்கப்படவில்லை என்பதால் உள்ளூர் விடுமுறை நாளில் மாவட்ட தலைமை கருவூலம், கிளை கருவூலம், அவசர அரசு பணிகள் தேவையான பணியாளர்களை கொண்டு இயங்கும் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் வெளியிட்டுள்ள அறிவிக்கை மூலமாக உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

Updated On: 24 Feb 2022 2:45 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்