விளையாட்டு துறையில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்கலாம், குமரி ஆட்சியர் தகவல்
விளையாட்டு துறையில் சாதனை படைத்தவர்கள் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என குமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தெரிவித்து உள்ளார்.
HIGHLIGHTS
இந்திய நாட்டின் இரண்டாம் பெரிய விருதான பத்மவிருதுகள்-2022. குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்பட உள்ளது. இந்த விருதுகள் பல துறைகளில் அளப்பரிய சாதனை புரிந்தவர்கள், கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை, அறிவியல் மற்றும் பொறியியல், பொது விவகாரம், வர்த்தகம் மற்றும் தொழில்துறை போன்ற துறைகளில் அளப்பரிய சாதனை புரிந்தவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
இதில் விளையாட்டு துறையில் அளப்பரிய சாதனை புரிந்தவர்கள் அவர்களது விண்ணப்பதினை www.padmaawards.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும், பதிவேற்றம் செய்ய 15-9- 2021 கடைசி நாள் எனவும் ஆட்சியரின் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு நாகர்கோவில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலகத்தை தொடர்புகொண்டு விவரங்களை பெற்றுக்கொள்ளலாம் எனவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.