/* */

கன்னியாகுமரியில் காணாமல் போன மூதாட்டி நெல்லையில் பிணமாக மீட்பு

குமரியில் காணாமல் போன மூதாட்டி, நெல்லையில் பிணமாக மீட்கப்பட்டார்.

HIGHLIGHTS

கன்னியாகுமரியில் காணாமல் போன மூதாட்டி நெல்லையில் பிணமாக மீட்பு
X

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த மூக்கம்மாள் (93) என்ற மூதாட்டி கடந்த 08.04.2022 அன்று காணாமல் போனார்.இது குறித்து அவரின் பேரன் சங்கர் என்பவர் கோட்டார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் மீது துரித நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரன் பிரசாத் உத்தரவிட்டார்.

இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அமைந்துள்ள CCTNS பிரிவின் உதவி ஆய்வாளர் பத்மா மற்றும் பெண் தலைமை காவலர் மேபின் சிம்லா ஆகியோர் CCTNS PORTAL மூலம் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது நெல்லை மாவட்டம் களக்காடு காவல் நிலையத்தில் அடையாளம் தெரியாத வயதான பெண்ணின் பிணம் கண்டெடுக்கப்பட்டதும் அங்கு வழக்கு பதிவாகியிருந்ததும் தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து நடந்த விசாரணையில் அந்தப் பிணம் காணாமல் போன மூக்கம்மாள் என்பது தெரியவந்தது.காணாமல் போன வயதான பெண்மணியை CCTNS பிரிவு மூலம் 5 மணி நேரத்தில் கண்டுபிடித்த உதவி ஆய்வாளர் மற்றும் பெண் தலைமை காவலரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டினார்.

Updated On: 26 April 2022 8:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    டிஆர்பி தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
  2. கோயம்புத்தூர்
    கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட தடைகோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
  3. லைஃப்ஸ்டைல்
    காதலில் காத்திருப்பதுகூட ஒரு தனி சுகமே..!
  4. வானிலை
    அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் வெப்ப அலை வீச வாய்ப்பு! வானிலை...
  5. தமிழ்நாடு
    சேதமான அரசுப் பேருந்துகளை 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய உத்தரவு!
  6. லைஃப்ஸ்டைல்
    செண்பகச்சேரி லக்ஷ்மி நரசிம்மர் கோயில் பால்குட திருவிழா..!
  7. தமிழ்நாடு
    22 மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறையைப் போக்க ரூ.150 கோடி ஒதுக்கீடு
  8. லைஃப்ஸ்டைல்
    தம்பதிகள் பிறந்த நாள் கவிதைகள் இதோ..!
  9. லைஃப்ஸ்டைல்
    எனதுயிர் நண்பனே உனதுயிர் என் வசம்..!
  10. சினிமா
    தளபதி விஜய்யின் வசனங்கள்..!