Begin typing your search above and press return to search.
ஆரம்ப சுகாதார நிலையத்தில் பழுதான எக்ஸ்ரே கருவி - பொதுமக்கள் போராட்டம்
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே செண்பகராமன்புதூர் பகுதியில் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. கடந்த சில நாட்களாக இங்கு வைக்கப்பட்டுள்ள எக்ஸ்ரே கருவி பழுதடைந்து உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவர் கடந்த மூன்று தினங்களாக எக்ஸ்ரே எடுப்பதற்காக அங்கு சென்றுள்ளார். ஆனால் எக்ஸ்ரே எடுக்காமல் சுகாதார நிலைய ஊழியர்கள் அவரை அலைகளித்து வந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து பாதிக்கப்பட்ட பெண், செண்பகராமன்புதூர் ஊராட்சி மன்ற தலைவர் கல்யாணசுந்தரத்திடம் தெரிவித்தார். இதனையடுத்து கல்யாணசுந்தரம் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் மற்றும் பொதுமக்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.