/* */

காட்டுயானை தாக்கி உயிரிழந்த மாணவி குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க கோரிக்கை

காட்டு யானை தாக்கி பலியான கல்லூரி மாணவி குடும்பத்துக்கு உடனடியாக நிவாரணம் வழங்க சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் கோரிக்கை.

HIGHLIGHTS

காட்டுயானை தாக்கி உயிரிழந்த மாணவி குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க கோரிக்கை
X

காட்டு யானை தாக்கி பலியான கல்லூரி மாணவி குடும்பத்துக்கு உடனடியாக நிவாரணம் வழங்க சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் காேரிக்கை மனு அளித்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் மாராமலை பகுதியில் உள்ள மலை பாதை சாலையில் கோவை வேளாண்மை கல்லூரி மாணவியான ஸ்ரீநா தனது தந்தையுடன் கடந்த ஜூலை மாதம் 20 ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது மலை பாதை சாலையின் குறுக்கே நின்று கொண்டு இருந்த ஒற்றை காட்டு யானை தந்தை மற்றும் மகளை தாக்கியது.

இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஸ்ரீநா சிகிச்சை பலன் இன்றி உயிர் இழந்தார். அவரின் தந்தை இரு கால்களும் செயல் இழந்த நிலையில் வீடு திரும்பினார். இச்சம்பவத்தில் உயிர் இழந்த ஸ்ரீநாவின் குடும்பத்திற்கு அரசு நான்கு லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்தது. இந்நிலையில் அந்த நிவாரண தொகை இது வரை அவரது குடும்பத்தினருக்கு வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து இன்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட வன அலுவலகத்தில் மாவட்ட வன அதிகாரியை கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினரும் அதிமுக மாநில கழக அமைப்பு செயலாளருமான தளவாய் சுந்தரம் சந்தித்தார்.

அப்போது யானை தாக்கி பலியான விவசாய கல்லூரி மாணவி ஸ்ரீநாவின் குடும்பத்திற்கு அரசின் 4 லட்சம் நிதி உதவியையும் மற்றும் பலத்த காயம் அடைந்த அவரது தந்தையின் வாழ்வாதாரத்திற்கு தேவையான நடவடிக்கைகளையும் உடனடியாக எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து மனு அளித்தார்.

Updated On: 29 Oct 2021 3:00 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்