Begin typing your search above and press return to search.
குமரியில் பல்வேறு இடங்களில் இடி மின்னலுடன் கனமழை
குமரியில் பல்வேறு இடங்களில் பெய்த இடி மின்னலுடன் கூடிய கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
HIGHLIGHTS
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த வருடம் நவம்பர் மாதம் பெய்த கன மழைக்கு பின்னர், கடும் வெயிலானது பொது மக்களை வாட்டி வதைத்து வந்தது. வெளியே நடமாட முடியாத அளவிற்கு இருந்து வந்த வெயிலின் காரணமாக பொதுமக்களும், வாகன ஒட்டிகளும், மாணவ மாணவிகளும் பெரும் பாதிப்பை சந்தித்து வந்தனர்.
இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில், சுசீந்திரம், பூதப்பாண்டி, ஆரல்வாய்மொழி உட்பட பல்வேறு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. தற்போது பெய்து வரும் கனமழையால் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் குளிர்ச்சியான நிலை நிலவி வருகிறது. நீண்ட நாட்களுக்கு பின்னர் பெய்து வரும் கனமழையால் விவசாயம் செழிப்பதோடு குடிநீர் தேவையும் நிறைவேறும் என்பதால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.