Begin typing your search above and press return to search.
சட்டவிரோத மது விற்பனை - 20 பேரை அதிரடியாக கைது செய்த போலீஸ்
குமரியில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட 20 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
HIGHLIGHTS
கன்னியாகுமரி மாவட்டத்தில் மது வகைகள் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதாகவும், அவ்வாறு விற்கப்படும் மதுவை அருந்தும் மது பிரியர்களால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் தொடர்ந்து புகார்கள் வந்தன.
இந்நிலையில், குமரி மாவட்டத்தில் போதை பொருட்கள் விற்பனையை தடுக்கவும், சட்ட விரோத மது விற்பனையை தடுக்கவும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவிட்டார்.
அதன்படி, மாவட்டம் முழுவதும் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் சட்டவிரோதமாக, அனுமதியில்லாமல் மது விற்ற 20 பேரை கைது செய்த போலீசார், அவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 307 மது பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.