ஊரடங்கு அறியாமல் வரும் வெளிமாநில ஐயப்ப பக்தர்கள்: குமரியில் பரிதவிப்பு
ஊரடங்கு குறித்து அறியாமல் வரும் வெளிமாநில ஐயப்ப பக்தர்கள் உரிய தகவல் இன்றி பரிதவித்து வருகின்றனர்.
HIGHLIGHTS
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழகத்தில் ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது, அதன்படி ஞாயிற்று கிழமையான நேற்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.
அதன்படி அந்த நாளில் விதிமுறைகளை மீறி கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுமக்கள் பல்வேறு காரணங்களை கூறி வெளியே சுற்றி வருகின்றனர்.
இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் பல்வேறு சந்திப்புகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தாலும் விதிமுறைகளை மீறி வெளியே வரும் நபர்களை போலீசாரும் எச்சரித்து அனுப்பினர்.
இந்நிலையில் சபரிமலையில் மகரஜோதி தரிசனம் முடிந்து திரும்பிய ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களை சேர்ந்த ஐயப்ப பக்தர்களையும் அவர்களின் ஊருக்கு செல்ல போலீசார் அனுமதிக்காததால் செய்வதறியாது திகைத்த ஐயப்ப பக்தர்கள் கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையிலேயே தங்களது வாகனங்களை நிறுத்தினர்.
குமரியில் தற்போது வெப்பம் அதிகமாக இருக்கும் நிலையில் நிழலில் ஒதுங்க கூட ஐயப்ப பக்தர்கள் தவித்ததோடு இன்றும் முழு ஊரடங்கு இருக்குமோ என்ற எண்ணத்தில் அங்கேயே அமர்ந்தனர்.
தொடர்ந்து அங்கு வந்த நெடுஞ்சாலை ரோந்து வாகன போலீசார் இன்று ஊரடங்கு கிடையாது நீங்கள் செல்லலாம் என கூறியதை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து திரும்பி சென்றனர்.