/* */

மனு கொடுக்க வந்த முதியவர்கள்: தேடி வந்து மனு பெற்ற குமரி எஸ்பி

குமரியில் மனு கொடுக்க வந்த முதியவர்களை தேடி வந்து மனு வாங்கிய குமரி காவல் கண்காணிப்பாளர்.

HIGHLIGHTS

மனு கொடுக்க வந்த முதியவர்கள்: தேடி வந்து மனு பெற்ற குமரி எஸ்பி
X

குமரியில் முதியவர்கள் இருக்கும் இடத்திற்கே நேரடியாக சென்று மனு வாங்கிய எஸ்பி.

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரன் பிரசாத் பொது மக்களின் பிரச்சனைகள் குறித்த மனுக்களை நாள்தோறும் பெற்று அது தொடர்பாக நடவடிக்கை எடுத்து வருகிறார். இன்று வழக்கம் போல் பொது மக்கள் தங்கள் பிரச்சனைகள் குறித்த மனுக்களை அளிக்க வந்திருந்தனர். அப்போது மாவட்டத்தில் பல்வேறு பகுதியிலிருந்து முதியவர்கள் மனுவினை அளிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்திருந்தனர்.

இதனை அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரிகிரன் பிரசாத் முதியவர்கள் இருக்கும் இடத்திற்கே நேரடியாக சென்று மனுவினை வாங்கி மனு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். இதனிடையே மாவட்ட காவல் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் 04652 220167 என்ற தொலைபேசி எண்ணை மூத்த குடிமக்கள் தொடர்பு கொண்டு அவர்கள் புகார் தொடர்பான விவரங்களை தெரிவிக்கலாம்.

புகார் தெரிவித்தவுடன் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திலிருந்து 24 மணி நேரத்திற்குள் அவரது வீடுகளுக்கே நேரடியாகச் சென்று புகார் குறித்து விசாரணையை போலீசார் மேற்கொள்வார்கள். மனு அளிக்க முதியவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வர தேவையில்லை என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்து உள்ளார்.

Updated On: 21 April 2022 8:30 AM GMT

Related News

Latest News

  1. அவினாசி
    சீரான முறையில் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கலெக்டரிடம்...
  2. அவினாசி
    கல்லூரி மாணவர்களை பாதி வழியில் இறக்கிவிட்ட தனியார் பஸ்களை சிறைபிடித்த...
  3. திருப்பூர்
    12 டன் சின்ன வெங்காயத்தை கடத்திய லாரி டிரைவர் உள்ளிட்ட 2 பேர் கைது
  4. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
  5. காங்கேயம்
    இன்று முதல் போராட்டம்; வெள்ளகோவில் விவசாயிகள் முடிவு
  6. தமிழ்நாடு
    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு ஜூன் 2-ம் தேதி வரை கோடை விடுமுறை
  7. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால்...
  8. திருப்பூர்
    வெயில் நேரத்தில் வெளியே போகாதீங்க; திருப்பூர் கலெக்டர் அட்வைஸ்!
  9. கீழ்பெண்ணாத்தூர்‎
    தண்ணீர் பந்தலை திறந்து வைத்த துணை சபாநாயகர்
  10. ஈரோடு
    ஈரோடு அரசு அருங்காட்சியகத்தில் தஞ்சாவூர் ஓவியக் கண்காட்சி