Begin typing your search above and press return to search.
முப்படை தளபதி பிபின் ராவத் மறைவு: குமரியில் பொதுமக்கள் அஞ்சலி
ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தளபதி பிபின் ராவத் மறைவிற்கு குமரி மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
HIGHLIGHTS
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உருவப்படத்திற்கு கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
குன்னூரில் நேற்று நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தளபதி பிபின் ராவத்,அவரது மனைவி உட்பட 13 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். அவர்களின் பூத உடலுக்கு இன்று தமிழக அரசு சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் குன்னூரில் அஞ்சலி செலுத்தினார்.
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த முப்படை தளபதி பிபின் ராவத் உருவப்படத்திற்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா வந்தவர்களும் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.