/* */

முப்படை தளபதி பிபின் ராவத் மறைவு: குமரியில் பொதுமக்கள் அஞ்சலி

ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தளபதி பிபின் ராவத் மறைவிற்கு குமரி மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

HIGHLIGHTS

முப்படை தளபதி பிபின் ராவத் மறைவு: குமரியில் பொதுமக்கள் அஞ்சலி
X

முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உருவப்படத்திற்கு கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உருவப்படத்திற்கு கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

குன்னூரில் நேற்று நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தளபதி பிபின் ராவத்,அவரது மனைவி உட்பட 13 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். அவர்களின் பூத உடலுக்கு இன்று தமிழக அரசு சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் குன்னூரில் அஞ்சலி செலுத்தினார்‌.

இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த முப்படை தளபதி பிபின் ராவத் உருவப்படத்திற்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா வந்தவர்களும் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

Updated On: 9 Dec 2021 3:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...