Begin typing your search above and press return to search.
குடும்ப பிரச்சினை காரணமாக ஆட்டோ டிரைவர் தற்கொலை.
நாகர்கோவிலை சறுக்கல்விளை பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை
HIGHLIGHTS
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த சறுக்கல்விளை பகுதியை சேர்ந்தவர் 37 வயதான வனஜன். ஆட்டோ ஓட்டுனரான இவருடைய மனைவி ரேவதி.
இந்நிலையில் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் கோபித்து கொண்ட வனஜன் வீட்டில் உள்ள ஒரு அறைக்கு சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைக் கண்ட உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் இதுகுறித்து கோட்டார் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்