/* */

ஒரே நாளில் இரு வெவ்வேறு கொலை சம்பவம்: 1 மணி நேரத்தில் குற்றவாளிகள் கைது

குமரியில் ஒரே நாளில் இருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 1 மணி நேரத்தில் குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

ஒரே நாளில் இரு வெவ்வேறு கொலை சம்பவம்: 1 மணி நேரத்தில் குற்றவாளிகள் கைது
X

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ஈத்தாமொழி நங்கூரம் பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன், ஹோட்டல் தொழிலாளியான இவர் நேற்று இரவு தன் உடன்பிறந்த சகோதரர் வினோ மற்றும் அவரது நண்பர்களுடன் சேர்ந்து ஊரில் ஒரு பகுதியில் மது அருந்தி இருக்கிறார்.

இதனிடையே இன்று காலை காளியாயன்விளை பகுதியில் உள்ள தும்பு ஆலை அருகே ஈஸ்வரன் பிணமாக கிடந்துள்ளார். ஊர்மக்கள் பார்த்து ஈத்தாமொழி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன் அடிப்படையில் சம்பவ இடம் வந்த போலீசார் உடலை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இவர்கள் மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் கொலை நடந்து இருக்கலாம் என தெரிகிறது. ஈஸ்வரனின் உடன் பிறந்த சகோதரர் வினோ மற்றும் நண்பர்கள் தலைமறைவாகி உள்ள நிலையில் அவர்களை தேடி கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

இதே போன்று இரணியல் அருகே கரிசல்விளை பகுதியை சேர்ந்த செல்லையா (65) நிலம் பிரச்சனை சம்பந்தமாக இருந்து வந்த முன்விரோதத்தில் முதியவரை அவர் சகோதரர் தாக்கியதில் அவரும் பலியானர். இது குறித்து இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

ஒரே நாளில் மாவட்டத்தில் இரு கொலைகள் வெவ்வேறு இடங்களில் நடத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் இரு கொலை வழக்குகளிலும் தொடர்புடைய குற்றவாளிகளை போலீசார் 1 மணி நேரத்தில் கைது செய்தனர். இச்சம்பவத்தில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை பிடித்த போலீசாரின் செயல் பாராட்டும் வகையில் அமைந்துள்ளது.

Updated On: 6 Sep 2021 1:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  3. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  4. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  5. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  6. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!
  7. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...
  8. வீடியோ
    Pakistan-ல் Rahul ஆதரவாளர்கள் அட்டகாசம் | புலம்பும் மூத்த Congress...
  9. குமாரபாளையம்
    குடிநீர் ஆதாரம் குறித்து நீரேற்று நிலையத்தை பார்வையிட்ட கலெக்டர்
  10. லைஃப்ஸ்டைல்
    போலி உறவுகளை காலி செய்யுங்கள்..! வேண்டாத சுமைகள்..!