Begin typing your search above and press return to search.
போதையில் கொடூரமாக தாக்கிய மகன்: சிகிச்சை பலனின்றி தந்தை பலி
குமரியில், குடிபோதையில் மகன் கொடூரமாக தாக்கியதில் பலத்த காயம் அடைந்த தந்தை, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
HIGHLIGHTS
கன்னியாகுமரி மாவட்டம் மேலகிருஷ்ணன்புதூர் பகுதியை சேர்ந்தவர் சிவலிங்கம் (74). இவருடைய மனைவி செல்ல வடிவு, இவர்களுக்கு 4 மகள்களும் 2 மகன்களும் உள்ளனர் .இதில் இளைய மகன் அச்சுதன் (39). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அச்சுதனுக்கு குடிப்பழக்கம் உண்டு. இதனால் தினந்தோறும் குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்வது வழக்கமாக இருந்துவந்துள்ளது.
சம்பவத்தன்று மதுபோதையில் வீட்டிற்கு வந்த அச்சுதன், தனது தந்தையான சிவலிங்கத்தை கொடூரமாக தாக்கி உள்ளார். இதில் பலத்த காயமடைந்த சிவலிங்கத்தை, அவரது குடும்பத்தினர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சிவலிங்கம் இன்று பரிதாபமாக உயிரிழந்தார். சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.