/* */

குமரியில் 83 புதிய காவலர்களுக்கு பணி நியமன ஆணை: எஸ்பி வழங்கல்

குமரியில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட காவலர்களுக்கு பணி நியமன ஆணையை எஸ்.பி வழங்கினார்.

HIGHLIGHTS

குமரியில் 83 புதிய காவலர்களுக்கு பணி நியமன ஆணை: எஸ்பி வழங்கல்
X

குமரியில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட காவலர்களுக்கு பணி நியமன ஆணையை எஸ்.பி பத்ரிநாராயணன் வழங்கினார்.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்பட்ட ஆண் மற்றும் பெண் காவலருக்கான தேர்வில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 69 ஆண்கள், 14 பெண்கள் உட்பட 83 நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான பணி நியமன ஆணையை கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் வழங்கினார்.

முன்னதாக தேர்வான காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அழைத்து வாழ்த்துக்களை கூறிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கினார்.

மேலும் தேர்வில் தேர்ச்சி பெற்று காவலராக தேர்வு செய்யப்பட்டு உள்ளவர்கள், தங்களது பணியை நேர்மையுடனும், பொறுப்புடனும் திறம்பட செய்ய வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

Updated On: 9 March 2022 2:30 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்