/* */

உத்திரமேரூர் அருகே அதிமுக பிரமுகர் வீட்டில் நகை பணம் கொள்ளை: மர்ம நபர்கள் அட்டூழியம்

உத்திரமேரூர் அருகே அதிகாலை அதிமுக பிரமுகர் வீட்டில் நுழைந்த மர்ம நபர்கள் பெண்ணிடமிருந்து 12சவரன் நகைகளை பறிபத்து கொண்டும், ரூபாய் 8000 எடுத்துக் கொண்டும் சென்றுள்ளனர். இதுகுறித்து பெருநகர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

HIGHLIGHTS

உத்திரமேரூர் அருகே அதிமுக பிரமுகர் வீட்டில் நகை பணம்  கொள்ளை:  மர்ம நபர்கள் அட்டூழியம்
X

உத்திரமேரூர் அருகே அதிமுக பிரமுகர் வீட்டில் மர்ம நபர்கள் நகை, பணத்தை கொள்ளையடித்தனர்.

உத்திரமேரூர் அடுத்த களியாம்பூண்டி கிராமத்தில் வசித்து வருபவர் தங்க பஞ்சாட்சரம். இவர் உத்திரமேரூர் மத்திய ஒன்றிய செயலாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த சில நாட்கள் முன்பு கொரோனா தொற்று சிகிச்சை பெற்று வந்தால் வீட்டின் ஒரு பகுதியில் தனிமையில் உள்ளார்.

இந்நிலையில் இவரது மனைவி கீழ் தளத்திலும், மகன் மற்றும் மருமகள் மேல் தளத்திலும் உணவருந்தி படுத்திருந்த நிலையில், வீட்டின் பின்பக்கமாக வந்த மர்ம நபர்கள் கதவை உடைத்து உள்ள சென்று TV அருகே இருந்த பணம் ரூபாய் 8000/- எடுத்து கொண்டு, தெய்வநாயகி கழுத்தில் அணிந்திருந்த தாலி சரடு மற்றும் செயின் மொத்தம் 12 சவரன் பறித்துள்ளனர்.

அப்போது சத்தபோட்டு திருடனை பிடிக்க முயற்சித்த போது தாலி சரடு அறுந்தால் மர்ம நபர்கள் தப்பியோடினர்.

இதன்பின் சம்பவம் குறித்து பெருநகர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்து அதன் பேரில் காவல்துறையினர் மர்ம நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 13 July 2021 2:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீ எங்கே என் அன்பே, நீயின்றி நான் எங்கே? - மனைவியை காணவில்லை...
  2. லைஃப்ஸ்டைல்
    பூமி கணவன் வாடுவது கண்டு வான் மனைவி விடும் கண்ணீர், மழை..!
  3. லைஃப்ஸ்டைல்
    மீந்து போன இட்லிகளை பயன்படுத்தி ருசியான மசாலா இட்லி செய்வது எப்படி?
  4. நாமக்கல்
    செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா துவக்கம்
  5. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  6. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  7. ஈரோடு
    ஈரோடு தொகுதி ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமரா பழுது: ஆட்சியர் விளக்கம்
  8. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  9. நாமக்கல்
    டாஸ்மாக் ஊழியர்களை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களைப் பிடிக்க 6...
  10. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா