Begin typing your search above and press return to search.
ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் புதிதாக 163 நபர்களுக்கு வைரஸ் தொற்று
ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டத்தில் மாங்காடு , குன்றத்தூர் , ஸ்ரீபெரும்புதூர் என பல பகுதிகளில் 163 நபர்களுக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
HIGHLIGHTS
ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டத்தில் உள்ள குன்றத்தூர், மாங்காடு மற்றும் ஸ்ரீபெரும்புதூர் என பல பகுதிகளில் கொரோனா பரிசோதனைகள் மேற்கொண்டதில் 163 நபர்களுக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குன்றத்தூரில் 112 நபர்களுக்கும் , குன்றத்தூர் பேரூராட்சி 10 நபர்களுக்கும் , மாங்காடு பகுதியில் 9 நபர்களுக்கும் , ஸ்ரீபெரும்புதூரில் 31 நபர்களுக்கும் , ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் ஒரு நபருக்கும் என மொத்தம் 163 நபர்கள் சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவமனையில் மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர்