/* */

பணிகள் முடியாமல் திறக்கப்பட்ட கல்வெட்டுகளை அகற்ற அமைச்சர் உத்தரவு

யாத்ரி நிவாஸ் பணிகள் நிறைவு பெறாமல் திறக்கப்பட்டதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

HIGHLIGHTS

பணிகள்  முடியாமல் திறக்கப்பட்ட கல்வெட்டுகளை அகற்ற அமைச்சர் உத்தரவு
X

காஞ்சிபுரம் வருகை தந்த அமைச்சர் சேகர் பாபு.

புத்தாண்டு அன்று வழக்கம்போல் 12மணிக்கு சிறப்பு தரிசனத்திற்கு கோயில்கள் திறக்கப்படும் எனவும் பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி புத்தாண்டை கொண்டாட வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் , உலகளந்த பெருமாள் கோயில் சாமி தரிசனம் மேற்கொண்டார். அதன்பின் ஏகாம்பரநாதர் திருக்கோயிலுக்குச் சொந்தமான யாத்ரி நிவாஸ் தங்கும் விடுதியினை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி , நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் சுந்தர் , எழிலரசன் ஆகியோருடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டார்.

அதன்பின் செய்தியாளரிடம் பேசுகையில், கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் இருபத்திநாலு கோடி மதிப்பில் கட்டப்பட்ட யாத்ரி நிவாஸ் தங்கும் விடுதி அவசர கோலத்தில் பணிகள் முடிக்கப்படாமல் திறக்கப்பட்டதாகவும், தற்போது பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூடிய விரைவில் அனைத்து வசதிகளுடனும் கூடிய இந்த விடுதி பக்தர்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என தெரிவித்தார். பணிகள் முடியாமல் திறக்கப்பட்ட கல்வெட்டுகளை அகற்றவும் அமைச்சர் உத்தரவிட்டார்.

மேலும் வருகிற புத்தாண்டு அன்று நள்ளிரவு 12 மணிக்கு வழக்கம்போல் புத்தாண்டு சிறப்பு தரிசனத்திற்கு கோயில்கள் திறக்கப்படும் எனவும் பொதுமக்கள் அன்று நாள் முழுவதும் சாமி தரிசனம் மேற்கொள்ளலாம் எனவும் தமிழக அரசு அறிவித்த அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஒத்துழைக்க வேண்டும். திமுக அரசு எப்போதும் ஆன்மீகத்தின் மீது பற்று கொண்டதாகவே இருக்கும் எனவும் தெரிவித்தார்.

Updated On: 30 Dec 2021 4:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  2. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  3. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...
  4. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  5. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  6. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  7. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  8. ஈரோடு
    மூளைச்சாவு அடைந்த நாமக்கல் கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம்
  9. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  10. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது