Begin typing your search above and press return to search.
வாலாஜாபாத்: பாலாற்றில் வெள்ளம் காரணமாக 6வது நாளாக போக்குவரத்து தடை
வாலாஜாபாத் பாலாற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு காரணமாக போக்குவரத்து நிறுத்தம் 6வது நாளாக நீடிப்பதால் பொதுமக்கள் அவதி.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக வடகிழக்கு பருவமழை காரணமாக அனைத்து நீர் நிலைகள் நிரம்பியுள்ளது. இது மட்டுமில்லாமல் பாலாறு மற்றும் செய்யாற்றில் தொடர் வெள்ளப்பெருக்கு காரணமாக வாலாஜாபாத் பாலாற்றில் தரை பாலத்திற்கு மேல் நீர் செல்வதால் அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக வாலாஜாபாத் - இளையனார்வேலூர் சாலை போக்குவரத்து கடந்த 6வது நாளாக தடைசெய்யப்பட்டது. இந்நிலையில் இன்று பொதுமக்களே காலை தடைகளை அகற்றி போக்குவரத்தில் ஈடுபட்டனர்.
இதையறிந்த வருவாய்த்துறை , நெடுஞ்சாலை துறை மற்றும் போக்குவரத்து துறையினர் ஆய்வு மேற்கொண்டு மீண்டும் தடைகளை ஏற்படுத்தி போக்குவரத்தை தடை செய்தனர். மேலும் இரு பகுதிகளிலும் பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.