/* */

வாலாஜாபாத்: பாலாற்றில் வெள்ளம் காரணமாக 6வது நாளாக போக்குவரத்து தடை

வாலாஜாபாத் பாலாற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு காரணமாக போக்குவரத்து நிறுத்தம் 6வது நாளாக நீடிப்பதால் பொதுமக்கள் அவதி.

HIGHLIGHTS

வாலாஜாபாத்: பாலாற்றில் வெள்ளம் காரணமாக 6வது நாளாக போக்குவரத்து தடை
X

வாலாஜாபாத் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக வடகிழக்கு பருவமழை காரணமாக அனைத்து நீர் நிலைகள் நிரம்பியுள்ளது. இது மட்டுமில்லாமல் பாலாறு மற்றும் செய்யாற்றில் தொடர் வெள்ளப்பெருக்கு காரணமாக வாலாஜாபாத் பாலாற்றில் தரை பாலத்திற்கு மேல் நீர் செல்வதால் அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக வாலாஜாபாத் - இளையனார்வேலூர் சாலை போக்குவரத்து கடந்த 6வது நாளாக தடைசெய்யப்பட்டது. இந்நிலையில் இன்று பொதுமக்களே காலை தடைகளை அகற்றி போக்குவரத்தில் ஈடுபட்டனர்.

இதையறிந்த வருவாய்த்துறை , நெடுஞ்சாலை துறை மற்றும் போக்குவரத்து துறையினர் ஆய்வு மேற்கொண்டு மீண்டும் தடைகளை ஏற்படுத்தி போக்குவரத்தை தடை செய்தனர். மேலும் இரு பகுதிகளிலும் பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Updated On: 17 Nov 2021 10:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ...’ - பாரதியார் தமிழ் மேற்கோள்கள்!
  2. வீடியோ
    பரபரப்பான அந்த 4 நிமிடங்கள் | வாய் அடைத்துபோன பத்திரிகையாளர் |...
  3. லைஃப்ஸ்டைல்
    அழகான புள்ளிமானே, உனக்காக அழுதேனே! - உறவுகளின் வலிகள் மேற்கோள்கள்
  4. அரசியல்
    காலை வாரிய கட்சியினர் அதிமுகவில் நடப்பது என்ன?
  5. லைஃப்ஸ்டைல்
    ப்ரூஸ் லீ தமிழ் மேற்கோள்களும் விளக்கங்களும்
  6. லைஃப்ஸ்டைல்
    கண்களின் மொழி: ஒரு தமிழ்ப் பார்வை!
  7. அரசியல்
    அதிருப்தி... விரக்தி... சுணக்கம்… சரிகிறதா அ.தி.மு.க செல்வாக்கு..?
  8. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவியை காயப்படுத்தும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. வீடியோ
    ஜூன் 4க்கு பிறகு தெரியும் | முதல்வரை கைது செய்ய வாய்ப்பு-H.Raja பேட்டி...
  10. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணையில் நீர்வரத்து 92 கன அடியாக சரிவு