/* */

சாலை விதிகளை மீறும் அரசு போக்குவரத்து ஓட்டுநர்கள்

விதி‌மீறலுக்கு ஓட்டுநர்கள் பொய்யான காரணங்களை கூறுவதும் , ஒரு சில நேரங்களில் அவதூறாக பேசுவதாகவும் பொதுமக்கள் குற்றச்சாட்டு

HIGHLIGHTS

சாலை விதிகளை மீறும் அரசு போக்குவரத்து ஓட்டுநர்கள்
X

ஜவஹர்லால் மார்கெட் வழியாக போக்குவரத்து விதிகளை மீறும் அரசு பேருந்து.

காஞ்சிபுரம் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல்துறையினர் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து சென்னை, வேலூர் செல்லும் பேருந்துகள்‌, கச்சபேஸ்வரர் கோயில், ஏகாம்பரநாதர் சன்னதி தெரு , ஓலிமுகமதுபேட்டை வழியாக தேசிய நெடுஞ்சாலை அடைந்து சென்னை செல்ல அனைவருக்கும் அறிவுறுத்தப்பட்டது.

இதனை அரசு போக்குவரத்து ஓட்டுநர்கள் பல்வேறு காரணங்களை கூறி சங்கர மடம் வழியாக வருவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதேபோல் கிழக்கு ராஜ வீதி வழியாகவும் வருவதால் போக்குவரத்து நெரிசல் உண்டாகிறது.

இதை கேட்கும் போக்குவரத்து காவலர்களிடம் சாலை பழுது, இடை நில்லா பேருந்து, விரைவு பேருந்து என பொய் காரணங்களை கூறுகின்றனர். ஓரு சில நேரம் பொதுமக்கள் முன்னிலையில் அவதூறாக வரும் பேசுகின்றனர்.

இதனால் காவல் ஆய்வாளர் உள்ளிட்ட உயர் அலுவலர்கள் தங்களை சரிவர பணி பார்க்கவில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.அரசு ஊழியர்களே அரசு விதிகளை மீறுவது எவ்விதத்தில் நியாயம்.

இவர்களால் மற்ற வாகன ஓட்டிகளை‌ எவ்வாறு கட்டுப்படுத்துவது என தெரியாமல் போக்குவரத்து காவலர்கள் கவலையடைந்துள்ளனர்.

போக்குவரத்து அலுவலர்கள் உரிய போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க மறுக்கும் ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 4 May 2022 10:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காதலை ஆரத்தழுவி காலைப்பொழுதுக்கு ஒரு வணக்கம்..!
  2. திருப்பூர்
    போதைப் பொருள்களை ஒழிக்க மக்களின் போராட்டமே தீா்வு; இந்து முன்னணி...
  3. திருப்பூர்
    வெள்ளக்கோவில் நகராட்சி; ஒரே நாளில் ரூ.1 கோடி வரி வசூல் செய்து சாதனை
  4. லைஃப்ஸ்டைல்
    கொரோனா ஒன்றே போதும் செவிலியர் புகழ் பாட..!
  5. லைஃப்ஸ்டைல்
    6th wedding anniversary quotes- 6 வருட திருமண வாழ்க்கையின் வெற்றிக்கான...
  6. தூத்துக்குடி
    விரைவில் தூத்துக்குடி பாலக்காடு விரைவு ரயில் சேவை!
  7. அரசியல்
    மோடி என்ன தான் சொன்னார்..? தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்..!
  8. குமாரபாளையம்
    ராமர், சீதா திருக்கல்யாண வைபோகம்
  9. மயிலாடுதுறை
    நடுக்கடலில் ரு தரப்பு மீனவர்கள் சண்டை! இருவர் காயம்
  10. குமாரபாளையம்
    கோடை வெப்பம் சமாளிக்க நுங்கு, இளநீர், தர்பூசணி கடைகளை நாடிய