Begin typing your search above and press return to search.
வரதராஜபெருமாள் கோயில் உண்டியல் திறப்பு: ரூ51.86 லட்சம் காணிக்கை..
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டதில் பக்தர்கள் காணிக்கையாக ரூ.51,86,327 கிடைத்துள்ளது.
HIGHLIGHTS
அத்திவரதர் புகழ்பெற்ற காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜபெருமாள் கோவிலில் உள்ள 5 உண்டியல்கள் 9 மாதங்களுக்குப் பிறகு, அறநிலையத்துறை உதவி ஆணையர் மா.ஜெயா, கோவில் செயல் அலுவலர் என்.தியாகராஜன், ஆய்வாளர் பிரித்திகா ஆகியோர் முன்னிலையில் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது.
அதில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய ரொக்கப்பணம் ரூ.51,86,327, தங்கம் 89 கிராம், வெள்ளி 556 கிராம் கிடைத்ததாகஇந்து சமய அறநிலையத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது..