காஞ்சிபுரத்தில் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளிய வரதராஜ பெருமாள்
பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாள் விழாவான கருட சேவை நிகழ்வில் லட்சக்கணக்கான பக்தர்கள் எம்பெருமான் அருள் பெற்றனர்.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவில் வைகாசி பிரம்மோற்சவ மூன்றாம் நாள் காலை உற்சவம். ஊதா நிற பட்டு உடுத்தி தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி, வீதி உலா வந்து காட்சியளித்த காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் பல்லாயிர கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவில் வைகாசி பிரம்மோற்சவம் நேற்று முன் தினம் கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது.
வைகாசி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாள் காலை உற்சவத்தை முன்னிட்டு வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து, ஊதா நிற பட்டு உடுத்தி மலர் மாலைகள் திருவாபரணங்கள் அணிவித்து தங்க கருட வாகனத்தில் எழுந்தருளச் செய்தனர்.
பின்னர் மேளதாள, பேண்ட், வாத்தியங்கள், முழங்க, வேதப்பாராயண கோஷ்டியினர் பாடிவர, சிவப்பு பட்டு உடுத்திய ஸ்ரீ வரதராஜ பெருமாள் தங்க கருட வாகனத்தில், பாதம் தங்கிகள் தூக்கிச் செல்ல காஞ்சிபுரம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
தங்க கருட வாகனத்தில் வீதியுலா வந்த வரதராஜ பெருமாளை வழிநெடுகிலும் திரளான பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வணங்கி வழிபட்டு சென்றனர்.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான கருட சேவை உற்சவம் பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகை தருவதால் போக்குவரத்து நெரிசலை தடுக்க நான்கு தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு உள்ளனர்.
ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.