/* */

காஞ்சிபுரம் துணை மேயர் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை

மாவட்ட காங்கிரஸ் தலைவர் , நகர தலைவர் , மாமன்ற உறுப்பினர் கயல்விழி உள்ளிட்டோர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் துணை மேயர் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை
X

காஞ்சிபுரம் மிலிட்டரி சாலையில் உள்ள அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்த மாநகராட்சி துணை மேயர் குமரகுருநாதன் மற்றும் மாமன்ற உறுப்பினர் கயல்விழி சூசை, மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கி வரும் புரட்சியாளரும் என அழைக்கப்படும் டாக்டர் அம்பேத்காரின் 131 வது பிறந்தநாள் விழா நாடு முழுவதும் அவரது சிலைக்கு, மாலை அணிவித்து பல்வேறு உறுதிமொழிகளை தொண்டர்கள் ஏற்று வருகின்றனர்.

அவ்வகையில், காஞ்சிபுரம் மிலிட்டரி சாலையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு, காஞ்சிபுரம் மாநகராட்சி துணை மேயர் குமரகுரு நாதன், மாவட்ட காங்கிரஸ் தலைவர் நாகராஜன், காஞ்சிபுரம் நகர தலைவர் நாதன் மற்றும் மாமன்ற உறுப்பினர் கயல்விழி சூசை, வழக்கறிஞர் கார்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் அண்ணல் அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதேபோல், ரயில்வே சாலையில் உள்ள அண்ணல் அம்பேத்கர் சிலைக்கும்‌, காஞ்சி மாவட்ட காங்கிரஸ் சார்பில் மலர்மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளை ஒட்டி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளும் பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

Updated On: 14 April 2022 6:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  2. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?
  3. திருவண்ணாமலை
    சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு ரயில் சேவை துவக்கம்; மீண்டும்...
  4. லைஃப்ஸ்டைல்
    விழிகள் வழியே இதயம் தொட்ட உணர்வுகள்..!
  5. விளையாட்டு
    மார்க்ரம் ஏன் ஒதுக்கப்பட்டார்? சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் முடிவு சரியா?
  6. இந்தியா
    சூரத் பொது யோகா பயிற்சியில் 7000-க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள்
  7. பல்லடம்
    பல்லடத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
  8. வீடியோ
    மதமாற துன்புறுத்தப்பட்ட பெண் | Fadnavis செய்த அதிர்ச்சி சம்பவம்|...
  9. இந்தியா
    ஐநா நிகழ்ச்சியில் பங்கேற்கும் இந்திய பெண் பிரதிநிதிகள்
  10. காங்கேயம்
    வெள்ளகோவில்; கோழிக்கடையில் ரூ. 50 ஆயிரம் திருடியவா் கைது