/* */

காஞ்சிபுரத்தில் சர்ச்சையில் சிக்கிய குன்றத்தூர் வட்டாட்சியர் இடமாற்றம்

55 நிமிடத்தில் முறைகேடாக பட்டா வழங்கிய புகாரில் சிக்கிய குன்றத்தூர் வட்டாட்சியர் பிரியா மீது துறை விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில்  சர்ச்சையில் சிக்கிய குன்றத்தூர் வட்டாட்சியர் இடமாற்றம்
X

கோப்பு படம் 

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார் தாலுகா, கெருகம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் அன்னம்மாள், 65. இவருக்கு அதே கிராமத்தில் சர்வே எண்: 442/2ல் 1.2 ஏக்கர் நிலம் உள்ளது. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பான நிலத்தில் பாதி நிலத்தை அபகரிக்க, சிலர் திட்டமிட்டு, குன்றத்துார் தாசில்தாரிடம் போலி பட்டா பெற்று உள்ளனர்.

இது குறித்து பெரும் சர்ச்சை எழுந்த நிலையில் , வட்டாட்சியர் பிரியா தாலுகா அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர், எனது கடவுச்சொல்லை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டார் என குன்றத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இது தொடர்பாக துறை விளக்கம் மற்றும் விசாரணை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பட்டா வழங்கிய அனைத்து அலுவலர்களிடம் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மற்றும் நீதியியல் துறை அலுவலர்கள் விசாரணையை மேற்கொண்டார்.

இந்நிலையில், நேற்று குன்றத்தூர் வட்டாட்சியர் ஆர்.பிரியா அதிரடியாக இடம் மாற்றம் செய்யப்பட்டு, வாலாஜாபாத் சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் ஆக நியமனம் செய்யப்பட்டார். இவருக்கு பதிலாக வாலாஜாபாத் வட்டாட்சியர் அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் எம்.கல்யாணசுந்தரம் குன்றத்தூர் வட்டாட்சியர் நியமிக்கப்பட்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார்.

Updated On: 17 April 2022 8:43 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  2. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  3. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  5. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  6. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  7. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  8. வீடியோ
    மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு !பாஜக நிர்வாகியால் முதல்வர்...
  9. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா