/* */

கல்லூரிக்கு சென்ற முதல் நாளே வாகன விபத்தில் சிக்கி மாணவர் உயிரிழப்பு

காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்தூர் சமத்துவபுரம் பகுதியை சேர்ந்த தம்பிதுரை தனியார் அறிவியல் கலைக் கல்லூரியில் நேற்று முதலாம் ஆண்டு சேர்ந்துள்ளார்.

HIGHLIGHTS

கல்லூரிக்கு சென்ற முதல் நாளே வாகன விபத்தில் சிக்கி மாணவர் உயிரிழப்பு
X

கல்லூரிக்கு சென்ற முதல் நாளே இருசக்கர வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்த முதலாம் ஆண்டு கல்லூரி மாணவர் தம்பிதுரை.

காஞ்சிபுரம் அருகே கல்லூரி கட்டணம் செலுத்த முதல் நாள் கல்லூரி சென்ற மாணவன் தம்பிதுரை கல்லூரி அருகே இருசக்கர வாகனத்தில் லாரி மோதிய விபத்தில் சிக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையை சேர்ந்த ராஜன் என்பவரது மகனான தம்பிதுரை சிறு வயது முதலே காஞ்சிபுரம் ஏனாத்தூர் சமத்துவபுரம் பகுதியில் உள்ள தனது பாட்டியின் வளர்ப்பில் இருந்துள்ளார்.

காஞ்சிபுரத்தில் பிளஸ் டூ முடித்த நிலையில், காஞ்சிபுரம் அடுத்த கீழம்பி கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேற்று முதலாம் ஆண்டு இளங்கலை அறிவியல் வகுப்பில் சேர்ந்துள்ளார்.

இந்நிலையில் இன்று முதல் நாள் கல்லூரிக்கு சென்று விட்டு கல்லூரி கட்டணமும் , கட்டிவிட்டு வருவதாக தனது மாமாவிடம் கூறிவிட்டு தனது இரு சக்கர வாகனத்தில் கல்லூரிக்கு சென்றுள்ளார்.

கல்லூரி முடித்துவிட்டு வீடு திரும்ப கீழம்பி சாலையில் வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த எய்சர்( மினிலாரி) வாகனத்தின் மீதி மோதியதில் வாகனம் நிலை தடுமாறி தம்பிதுரை சாலையில் விழுந்தபோது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனடியாக அருகில் இருந்த கல்லூரி மாணவர்கள் பொதுமக்கள் என அனைவரும் 108 அவசர ஊர்திக்கு தகவல் தெரிவித்தும் , காவல்துறைக்கு வாகன விபத்து தொடர்பான தகவல் அளித்தனர்.

108 வாகனம் விரைவாக வந்து அவரை பரிசோதித்த நிலையில் தலை காயம் காரணமாக சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்ததை தெரிவித்துள்ளனர்

வாகன விபத்து குறித்து பாலு செட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அவரது உடலை காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்து லாரியை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிளஸ் டூ விடுமுறை காலத்தில் கேஎஃப்சி நிறுவனத்தின் உணவு டெலிவரி செய்யும் பணியை பகுதி நேரமாக செய்து கொண்டு கல்வி பயின்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது என அவர்கள் உறவினர்கள் தெரிவித்து கண்ணீர் வடித்தனர்.

கல்லூரிக்கு சென்ற முதல் நாளே வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் கல்லூரி மாணவர்களுடைய அதிர்ச்சியும் அவரது உறவினர்களும் பெருத்த சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது

Updated On: 5 July 2023 10:00 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?