ராகுல்காந்தி 52-வது பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு மருத்துவ முகாம் ஏற்பாடு: துணைமேயர் துவக்கம்..!
காஞ்சிபுரத்தில், ராகுல்காந்தி பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு மருத்துவ முகாமை காஞ்சிபுரம் துணை மேயர் குமரகுருநாதன் துவக்கி வைத்தார்.
HIGHLIGHTS
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தேசியத்தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தியின் 52-வது பிறந்தநாள் விழா காஞ்சிபுரத்தில் கொண்டாடப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம், மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.
முன்னதாக, காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் அமைந்துள்ள அண்ணல் காந்தியடிகள் மற்றும் காமராஜர் ஆகியோர் உருவ சிலைகளுக்கு மாவட்டத் தலைவர் அளவூர் நாகராஜன், துணை மேயர் குமரகுருநாதன், நகர காங்கிரஸ் தலைவர் நாதன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதைத்தொடர்ந்து, அண்ணா அரங்கம் அருகே நடைபெற்ற அன்னதான விழாவில் ஏழை எளியோருக்கு அறுசுவை உணவு அளிக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாநகராட்சி துணை மேயர் குமரகுரு நாதன் தேர்ந்தெடுக்கப்பட்ட 22-வது வார்டு பகுதியான திருக்காளிமேடு ஊராட்சி தொடக்கப்பள்ளியில் 20க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கலந்து கொண்ட சிறப்பு மருத்துவ முகாமை துவக்கி வைத்தார்.
இம்முகாமில், பொது மருத்துவம், பல், கண் மற்றும் இருதயம், மார்பக புற்றுநோய் உள்ளிட்ட நோய்களுக்கான சிறப்பு பரிசோதனை மேற்கொண்டு, ஆலோசனைகள் வழங்கப்பட்டன. காஞ்சிபுரம் சி.எஸ்.ஐ மருத்துவமனை மருத்துவக் குழுவினர் பொதுமக்களுக்கு பரிசோதனை மற்றும் ஆலோசனைகளை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் அன்பு, முன்னாள் கவுன்சிலர் சீனுவாசன், காஞ்சி காமராஜ், , பத்மநாபன், தி.மு.க வட்ட செயலாளர் மோகன் உள்ளிட்ட நகர காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.