ஆனி அமாவசையொட்டி சீதா தேவி சமேத ஸ்ரீகோதண்டராமருக்கு சிறப்பு திருமஞ்சனம்
ஆர்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள சீதாதேவி சமேத ஸ்ரீ கோதண்டராமர் திருக்கோயிலில் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.
HIGHLIGHTS
ஒவ்வொரு அமாவாசை தோறும் பெருமாள் மற்றும் பஜனை கோயில்களில் சிறப்பு திருமஞ்சனம் மற்றும் தீபாராதனைகள் நடை பெறுவது வழக்கம்.
காஞ்சிபுரம் அடுத்த ஆர்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீதேவி சமேத ஸ்ரீ கோதண்டராமர், லட்சுமணர் , ஆஞ்சநேயர் பஜனை கோயில் அமைந்துள்ளது.
ஆனி மாத அமாவாசையை ஒட்டி இன்று காலை கோதண்ட ராமர் சீதை லட்சுமணன் ஆஞ்சநேயருக்கு பல்வேறு அபிஷேகப் பொருட்களால் திருமஞ்சனம் செய்யப்பட்டது.
மேலும் சந்தனம் , துளசி, பன்னீர் உள்ளிட்ட பொருட்கள் கொண்ட சிறப்பு கலச நீர் திருமஞ்சனம் நடைபெற்றது.அதன் சிறப்பு வண்ண மலர்களால் அலங்காரம் மேற்கொள்ளப்பட்டு தீப ஆராதனை நடைபெற்று பக்தர்களுக்கு துளசி தீர்த்தம் வழங்கியும் சடாரி ஆசீர்வாதம் உள்ளிட்டவை பக்தர்களுக்கு மேற்கொள்ளபட்டது.
விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு தயிர் சாதம் , பஞ்சாமிர்தம் பிரசாதமாக வழங்கப்பட்டது.