/* */

காஞ்சிபுரத்தில் செங்கல் சூளைகளில் அதிரடி ஆய்வு மேற்கொண்ட ஆர்டிஒ

காஞ்சிபுரத்தில் செங்கல் சூளைகளை ஆர்டிஒ ராஜலட்சுமி தீடிர் அதிரடி ஆய்வு மேற்கொண்டு சிறிய ரக வாகனத்தை பறிமுதல் செய்தார்.

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில் செங்கல் சூளைகளில் அதிரடி ஆய்வு மேற்கொண்ட ஆர்டிஒ
X

செங்கல் சூளை பகுதிகளில் ஆய்வுமேற்கொண்ட வருவாய் கோட்டாட்சியர் ராஜலட்சுமி பறிமுதல் செய்த வாகனத்துடன்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு புறம்போக்கு மற்றும் ஆற்றுப்படுகையில் செங்கல் சூளைகள் அனுமதியின்றி செயல்படுகிறதா என்று வருவாய் கோட்டாச்சியர் ராஜலட்சுமி தீடிர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சிறிய ரக வாகனத்தை பறிமுதல் செய்துள்ளார் .

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆற்றுப் படுகைகள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களில் சட்டவிரோதமாக வருவாய்த்துறை அனுமதி இன்றி இயங்கும் செங்கல் சூளைகளை ஆய்வு மேற்கொள்ள காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி வருவாய் கோட்டாட்சியர்களுக்கு அறிவுறுத்தினார்.

அவ்வகையில் காஞ்சிபுரம் வருவாய்க் கோட்டாட்சியர் கோட்டத்திற்கு உட்பட்ட காஞ்சிபுரம் , வாலாஜாபாத் , உத்திரமேரூர் உள்ளிட்ட பகுதிகளில் வருவாய்த்துறை அலுவலர்கள் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டனர்.

மேலும் காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் பெ.ராஜலட்சுமி மேல்கதிர்பூர், கீழம்பி , மங்கல்பாடி உள்ளிட்ட பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார் .

அப்போது சட்டவிரோதமாக செயல்பட்ட செங்கல் சூளையில் ஆய்வு மேற்கொண்ட போது அங்கிருந்த வாகனத்தை ஓட்டுநர் எடுத்துச் செல்ல முயன்றபோது சுற்றிவளைத்த வருவாய்த்துறையினர் வாகனத்தை பறிமுதல் செய்தனர்.வாலிபர் தப்பி ஓடினார்.

மேலும் காஞ்சிபுரம் வருவாய் கோட்டத்தில் செங்கல் சூளைகள் அமைக்க வருவாய்த்துறை அனுமதி கட்டாயம் அவசியம் எனவும் விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அங்கு பயன்படுத்தபடும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் வருவாய் கோட்டாட்சியர் எச்சரித்துள்ளார்.

Updated On: 4 Aug 2021 12:00 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  2. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  3. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  4. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  5. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  6. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  7. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  8. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்
  9. வீடியோ
    😍கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா😍| Kavin-ன் எல்லைமீறிய அட்டகாசமான...
  10. வீடியோ
    4 ஸ்பின்னர்கள் எதற்கு ? Rohit சொன்ன ரகசியம் !#rohitsharma #teamindia...