/* */

காஞ்சிபுரத்தில் ரேஷன் அரிசி கடத்தல் - மூவர் கைது

காஞ்சிபுரத்தில், 15 டன் அரிசி கடத்தல் தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில் ரேஷன் அரிசி கடத்தல் - மூவர் கைது
X

கைதானவர்கள்.

கடந்த சில தினங்களுக்கு முன் வருவாய் துறையினரும் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், காஞ்சிபுரம் ஒலிமுகம்மது பேட்டை காவாங்கரை பகுதியில் வெளிமாநிலங்களுக்கு கடத்தி கொண்டு செல்ல தயாராக இருந்த 15 டன் ரேஷன் அரிசியையும் கடத்திச் செல்ல தயாராக இருந்த 4 லாரிகளையும் பறிமுதல் செய்தனர்.

ரேஷன் அரிசி கடத்தியவர்கள் மீது, காஞ்சிபுரம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். போலீசாரின் தீவிர விசாரணையில் ரேஷன் அரிசி கடத்தலில் தொடர்புடைய ஒளி முகமது பேட்டை பகுதியைச் சேர்ந்த அரிசி உரிமையாளர் பிலால், லாரி டிரைவர் சாதிக் பாஷா, கூலியாள் நிஜாம் ஆகிய மூன்று வாலிபர்களையும் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மூவரையும் சிறையில் அடைத்துள்ளனர்.

Updated On: 23 Dec 2021 2:30 PM GMT

Related News