/* */

+2 ஆங்கில தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட தனியார் பள்ளி மாணவன்

உத்திரமேரூர் தனியார்‌ பள்ளி மாணவன் ஆங்கில தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டபோது பறக்கும் படை அலுவலர் கண்டுபிடித்தனர்.

HIGHLIGHTS

+2 ஆங்கில தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட தனியார் பள்ளி மாணவன்
X

 +2 பொதுத்தேர்வு கால அட்டவணை.

தமிழக பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் +2 மற்றும் 10 வகுப்பு பள்ளி மாணவர்களுக்கான அரசு பொதுத்தேர்வு கடந்த சில தினங்களுக்கு முன் துவங்கியது. பிளஸ் டூ மாணவர்களுக்கு கடந்த ஐந்தாம் தேதி தமிழ் பாட பிரிவு உடன் அரசு பொதுத்தேர்வு துவங்கியது. மாணவ மாணவிகள் என மொத்தம் 13 ஆயிரத்து 518 பேர் தேர்வுக்கான நுழைவு சீட்டு பெற்றிருந்தனர்.

இந்நிலையில் நேற்று ஆங்கில பாடப்பிரிவிற்கான தேர்வு நடைபெற்றது. உத்திரமேரூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் உத்திரமேரூர் பகுதியில் சேர்ந்த தனியார் ஆங்கிலப்பள்ளி மாணவர்கள் தேர்வு எழுதினர். அப்போது தேர்வு முறைகேட்டில் ஈடுபடா வண்ணம் செயல்பட மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியும், 85 பறக்கும் படைகள் தேர்வை கண்காணிக்க நியமிக்கப்பட்டிருந்தனர்.

அவ்வகையில் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட பறக்கும் படை அலுவலர்கள் தேர்வு அறையில் சந்தேகமாக இருந்த மாணவனை சோதனை செய்தபோது முறைகேட்டில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தேர்வு முறைகேட்டில் ஈடுபடும் மாணவர்களை கண்டறியப்பட்டால் நிரந்தரமாக தேர்வு எழுத தடை செய்யப்படும் என எச்சரித்தும் இம்மாணவன் முறைகேட்டில் ஈடுபட்டது அதிர்ச்சி அளிக்கிறது.

Updated On: 10 May 2022 2:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  2. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  3. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...
  4. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  5. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  6. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  7. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  8. ஈரோடு
    மூளைச்சாவு அடைந்த நாமக்கல் கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம்
  9. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  10. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது