காஞ்சிபுரம் ஸ்ரீயதோக்தகாரி பெருமாள் கோவில் பங்குனி பிரம்மோற்சவம் திருதேர் உற்சவம்
ஸ்ரீ கோமளவல்லி தாயார் சமேத ஸ்ரீ யதோக்தகாரி பெருமாள் திருதேர் உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்.
HIGHLIGHTS
108 திவ்யதேசத்தில் ஒன்றான காஞ்சிபுரம் ஸ்ரீ கோமளவல்லி தாயார் சமேத ஸ்ரீ யதோக்தகாரி பெருமாள் கோவில் பங்குனி பிரம்மோற்சவம் திருவிழா கடந்த 25ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து மூன்றாம் நாள் ஸ்ரீ யதோக்தகாரி பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி தந்தார். ஏழாம் நாளான இன்று ஸ்ரீ யதோக்தகாரி பெருமாள் கோவிலிலிருந்து புறப்பட்டு திருத்தேரில் எழுந்தருளினார்.
பெருமாளுக்கு வழியெங்கும் சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்று பின்பு டி கே நம்பி தெரு, செட்டித்தெரு வழியாக ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இவ்விழாவில் பொது மக்கள் ஏராளமாக கலந்து கொண்டனர் வழியெங்கும் அன்னதானம் நீர் மோர் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை பரம்பரை தர்மகர்த்தா நல்லப்பா நாராயணன் தலைமையில் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.