/* */

காஞ்சிபுரம் ‌‌ : கூரம் ஏரியை கிராம மக்களுடன் இணைந்து பொதுப்பணித்துறை சீரமைப்பு

கூரம் ஏரி கரைகளை பலப்படுத்தும் பணியில் பொதுப்பணித் துறையினர், விவசாயிகள், பொதுமக்கள் ஆகியோர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் ‌‌ : கூரம் ஏரியை கிராம மக்களுடன் இணைந்து பொதுப்பணித்துறை சீரமைப்பு
X

கூரம் ஏரிக்கரையை பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், பொதுமக்கள், பொதுப்பணித்துறையினர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த வாரம் முதலில் அவ்வப்போது கன மழை பெய்து வருகிறது. தற்போது வடகிழக்கு பருவமழை துவங்கி உள்ளதாகவும கடந்த இரண்டு நாட்களாக சில மணி நேரம் கனமழை பெய்தது.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 381 ஏரிகளில் தற்போது 99 ஏரிகள் முழு கொள்ளளவையும் எட்டி உள்ளது.

இந்நிலையில் காஞ்சிபுரம் அடுத்த கூரம் கிராமத்தில் தொடர் மழை காரணமாக ஏரி நிரம்பியுள்ளது. இந்த ஏரிக்கரையில் ஒரு பகுதியில் கரை வலுவிழக்கும் நிலையில் உள்ளதாக அக்கிராம மக்கள் பொதுப்பணித் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக பொதுப்பணித்துறையினர் அப்பகுதி விவசாயிகள் பொதுமக்களுடன் இணைந்து மணல் மூட்டைகள் உடன் அப்பகுதியில் சீரமைக்கும் பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில் சரியான தருணத்தில் பொதுப்பணித்துறை தங்களுடன் இணைந்து செயல்படுவதால் நீர் கசிவது வெளியேறுவது தவிர்க்கப்படும். இதனால் இப்பகுதி விவசாயிகள் விவசாயம் மேற்கொள்ள பெரிதும் உதவியாக இருக்கும் என தெரிவித்தனர்.

Updated On: 31 Oct 2021 5:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’