Begin typing your search above and press return to search.
காஞ்சிபுரம் உள்ளாட்சித்தேர்தல் : 3 மணி நிலவரப்படி 56% வாக்குகள் பதிவு
காஞ்சிபுரம் மாவட்டத்தில், உள்ளாட்சி இரண்டாம் கட்ட தேர்தலில் மூணு மணி நிலவரப்படி 56% வாக்குப்பதிவு நடைபெற்று உள்ளது.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுகள், இன்று காலை 7மணிக்கு ஸ்ரீபெரும்புதூர் மற்றும் குன்றத்தூர் ஒன்றியங்களில் துவங்கின.
இத்தேர்தலில், காலை முதலே வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை செலுத்த, ஆர்வமுடன் வாக்குச்சாவடிகளில் குவிந்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து, தங்களது ஜனநாயக்கடமை செய்தனர். இத்தேர்தலில், இன்று பகல் 3 மணி நிலவரப்படி, 369099 மொத்த வாக்கில் 1,01, 980 ஆண்களும், 1, 03, 403 பெண்கள் என, 2, 06 , 327 வாக்குகள் பதிவாகி உள்ளன. இது, 55.90 % வாக்குப்பதிவாகும்.