/* */

காஞ்சிபுரம் : அரசு அனுமதியளித்தும் பயனில்லை, திரையரங்குகள் மூடல்

தமிழக அரசு இன்று முதல் திரையரங்குகள் இயங்க அனுமதி அளித்திருந்தது, பார்வையாளர்கள் வராததால் காஞ்சியில் திரையரங்குகள் மூடப்பட்டது.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் :  அரசு அனுமதியளித்தும் பயனில்லை, திரையரங்குகள் மூடல்
X

காஞ்சிபுரத்தில் பார்வையாளர்கள் வராததால் மூடப்பட்ட திரையரங்கம்.

தமிழகத்தில் மெல்ல மெல்ல கொரோனா பரவல் குறைந்து வருவதால் தமிழக அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பு புதிய வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டது.

இதில் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கேளிக்கை விடுதிகள் , கடற்கரை , உயிரியல் பூங்கா உள்ளிட்டவைகள் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படும் எனவும் திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதித்து திரைப்படம் திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டது.

கடந்த இரு நாட்களாக திரையரங்குகள் திறக்கப்பட்டு தூய்மை பணியில் அதன் ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர். மேலும் இன்று காலை திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காஞ்சிபுரத்தில் போதிய பார்வையாளர்கள் , புதிய சினிமாக்கள் எதுவும் வெளியாகாததால் மீண்டும் ஒரு வாரம் திரையரங்குகள் மூட உள்ளதாக ஊழியர்கள் தெரிவித்தனர்.

அதுவரை தொடர்ந்து சுகாதார பணிகளை மேற்கொள்ள இருப்பதாகவும் பார்வையாளர்களின் பாதுகாப்புகள் அனைத்தும் உறுதி செய்யப்படும் என திரையரங்கு ஊழியர்கள் தெரிவித்தனர்.

Updated On: 23 Aug 2021 7:00 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?