Begin typing your search above and press return to search.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் பங்குனி உத்திர பெருவிழா
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் பங்குனி உத்திர பெருவிழாவில் ஏகாம்பரநாதர் பூத வாகனத்தில் வீதி உலா வந்தார்.
HIGHLIGHTS
பஞ்சபூத தலங்களில் ஒன்றான ஸ்ரீ ஏலவார்குழலி அம்மை உடனுறை ஸ்ரீ ஏகாம்பரநாதர் திருக்கோயில் பிலவ வருட பங்குனி உத்திர பெருவிழா கடந்த இரு தினங்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் காலை மற்றும் மாலை இரு வேலைகளிலும் பல்வேறு வாகனங்களில் ஸ்ரீஏலவார்குழலி அம்மை ஸ்ரீ ஏகாம்பரநாதர் நான்கு ராஜ வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம். மூன்றாம் நாள் திருவிழாவில் பூத வாகனத்தில் பல்வேறு மலர்களால் செய்யப்பட்ட சிறப்பு அலங்காரத்துடன் வீதி உலா வந்தார்.