/* */

காஞ்சிபுரம் மாவட்டம் : 2ம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நிறைவு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு சற்று முன்பு நிறைவு பெற்றது.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் மாவட்டம் :  2ம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நிறைவு
X

 சுங்குவார்சத்திரம் அருகே உள்ள வாக்கு சாவடியில் முகவர்கள்‌ முன்னிலையில் வாக்குப் பெட்டி சீல் வைக்கும் பணியில் அலுவலர்கள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு துவங்கியது. ஸ்ரீபெரும்புதூர் மற்றும் குன்றத்தூர் ஒன்றியங்களில் 601 வாக்குச் சாவடிகள் இதற்காக அமைக்கபட்டு இருந்தது.

காலை முதல் மாலை 3 மணி வரை அமைதியாகவே நடைபெற்று வந்த வாக்குப்பதிவு அதன்பின் வேகமெடுத்து வாக்குப்பதிவு மற்றும் வாக்குகள் பெறுவதில் கட்சி உறுப்பினர்கள் தீவிரம் காட்டி வந்தனர்.

ஸ்ரீபெரும்புதூர் மற்றும் குன்றத்தூர் ஆகிய ஒன்றியங்களில் சில பகுதிகளை மட்டும் அவ்வப்போது சலசலப்பு எழுந்து காவல்துறையால் கட்டுபடுத்த பட்டது.

இந்நிலையில் மாலை 6 மணி வரை வளாகத்தில் இருந்த நபர்களுக்கு மட்டுமே வாக்குப்பதிவு செலுத்த டோக்கன் அளித்து அனுமதி அளிக்கப்பட்டு அதன் பின் வந்த அனைவரும் திருப்பி அனுப்பப்பட்டனர்.

தற்போது பல வாக்கு சாவடிகளில் வாக்குப் பதிவு நிறைவு பெற்று வாக்குப் பெட்டிகளை சீல் வைக்கும் பணிகளில் தேர்தல் அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Updated On: 9 Oct 2021 12:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தோல்வி கண்டு துவளாதீர்..! வீழ்ச்சி எழுச்சிக்கான முயற்சி..!
  2. லைஃப்ஸ்டைல்
    உனை பிரியாத வரவேண்டும் என்னுயிரே..!
  3. வீடியோ
    சினிமா படத்தில்ல இருக்கிறது எல்லாம் நல்லவா இருக்கு? ...
  4. லைஃப்ஸ்டைல்
    குடும்ப உறவாகும் நட்பு..! இருபக்க மகிழ்ச்சி..!
  5. பொன்னேரி
    ஆற்றில் சட்டவிரோதமாக மணல் கொள்ளை
  6. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் 8 தேர்வு மையங்களில் நாளை நீட் தேர்வு
  7. ஈரோடு
    ஈரோடு சென்ட்ரல் ரோட்டரி சங்கம், ஈரோடு ஆத்மா மின்மயான அறக்கட்டளை...
  8. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ் MLA ரூபி மனோகரன் செய்தியாளர் சந்திப்பு | Ruby...
  9. வீடியோ
    அதெல்லாம் அவுங்க விருப்பம்!மிஷ்கினுக்கு அறிவுரை சொன்ன முதியவர்! சொல்ல...
  10. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர் சந்திப்பு |...