காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையராக ஜி.கண்ணன் பொறுப்பேற்பு
Commissioner Municipal Corporation - காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையராக ஜி.கண்ணன் பொறுப்பேற்றுக்கொண்டார்.
HIGHLIGHTS
Commissioner Municipal Corporation -திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜி. கண்ணன் , வயது 39, எம்.ஏ. பி.எட் முடித்து ஆசிரியர் பணி மேற்கொண்டு இருந்த நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஆணையராக தேர்ந்தெடுக்கப்பட்டு ராமேஸ்வரம் நகராட்சியின் ஆணையராக நியமிக்கப்பட்டார்.
அதன் பின் கோயம்புத்தூர் தமிழ்நாடு நகரில் பயிற்சி நிறுவனத்தின் இயக்குனராக பணிபுரிந்து வந்த நிலையில் தற்போது காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இன்று முதல் தனது பணிகளை காஞ்சிபுரத்தில் துவக்கி உள்ளார். முன்னதாக காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு ஆய்வுக்கு வந்த நகராட்சி நிர்வாக இயக்குனர் பா. பொன்னையாவை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அதன்பின் மாநகராட்சியின் மேயர் மகாலட்சுமி யுவராஜ் மற்றும் துணை மேயர் குமரகுருநாதன் ஆகியோருக்கு பொன்னாடைகள் அணிவித்து மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2