காஞ்சிபுரத்தில் கதவு திறக்காததால் காத்திருந்த மாற்றுத் திறனாளிகள்
Abled People - காஞ்சிபுரத்தில் முகாம் நடைபெற்ற மண்படத்தின் கதவு திறக்காததால் மாற்றுத் திறனாளிகள் காத்திருக்கவேண்டிய நிலை ஏற்பட்டது.
HIGHLIGHTS
Abled People -காஞ்சிபுரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் சிறப்பு மாற்று திறனாளிகள் கண்டறியும் மருத்துவ முகாம் அன்னை அஞ்சுகம் திருமண மண்டபத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
நேற்று மாலை முதல் காஞ்சிபுரத்தில் அவ்வப்போது கன மழை பெய்து வருகிறது.இந்நிலையில் காலை முதல் சாரல் மழை பெய்து வரும் நிலை காலை 9 மணிக்கு மருத்துவ முகாம் நடைபெறும் இடத்தில் 100க்கும் மேற்பட்டோர் கதவு திறக்காததால் நின்று கொண்டே டோக்கன் பெற காத்து கிடந்தனர்.
இறுதியாக 9.30 மணிக்கு கதவு திறந்து நிலை ஒருவரை ஒருவர் முந்தி சென்று பெற முயன்றது மனதை நெருட செய்தது.ஏற்கனவே மாற்றுத்திறனாளி ஆன இவர்கள் இது போன்ற நிலைக்கு தள்ளப்பட்ட அவலம் அடைய வைத்துள்ளது.
இதே போல் நேற்று மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்திற்கு வீல் சேர் வாங்க வந்த நபர் உள்ளே அனுமதிக்கப்படாமல் வெளியே காத்துக் கிடக்க வைத்தது அதிர்ச்சி அளித்தது.அவ்வலுவக வாசலில் அவர் காத்திருந்த நிலையும் அவர் இயற்கை உபாதைக்கு கூட செல்ல எந்த வீல் சேர் உபகரணங்களும் அளிக்காத அலுவலர்களின் செயல் அதிர்ச்சி அடைய வைத்தது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2