/* */

TNPSC தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் - 3ம் தேதி முன்பதிவு கடைசி நாள்

TNPSC தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகளுக்கு முன்பதிவு செய்ய 3ம் தேதி கடைசி நாள் என கலெக்டர் அறிவிப்பு.

HIGHLIGHTS

TNPSC தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் - 3ம்   தேதி முன்பதிவு கடைசி நாள்
X

மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் ( கோப்பு படம் ) 

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆண்டு திட்ட நிரலில் நடக்கவிருக்கும் தொகுதி 2 தொகுதி 2A தொகுதி 4 பதவிகளுக்கான அறிவிப்பினை எதிர்நோக்கி உள்ளது.

மாணவர்கள் தங்களை போட்டி தேர்விற்கு தயார் செய்து கொள்ளும் வகையில் இலவச பயிற்சி வகுப்புகள் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் மூலம் நடத்தபட்டு வருகிறது.

இங்கு செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10மணி முதல் 5மணி வரை மாணவர்கள் பயன்பெறும் வகையில் நேரடி இலவச போட்டித்தேர்வு பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது.

இப்பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள நபர்கள் வரும் 3ஆம் தேதிக்கு முன்பாகவோ அல்லது அன்று தங்கள் பெயரினை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொண்டு பயன் பெறலாம்.

இப்பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ளும் மாணவர்கள் போட்டித் தேர்விற்கென பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ள நூலகம் மற்றும் இணையதள வசதிகளை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

Updated On: 1 Sep 2021 8:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’