தந்தை திடீர் உயிரிழப்பு: காஞ்சிபுரம் தனியார் மருத்துவமனை மீது மகன்கள் குற்றச்சாட்டு!
நலமாக இருந்த தந்தை திடீரென இறந்ததாக அறிவிக்கப்பட்ட மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்து மகன்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் மாவட்டம் மாகரல் கிராமத்தை சேர்ந்த விவசாயி அப்பாதுரை. இவர் கடந்த 10 தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவர் தனது மகன்களிடம் உடல்நிலை நன்றாக உள்ளதாகவும் தன்னை வீட்டுக்கு அழைத்து செல்லுமாறு கூறியுள்ளார். இதை அடுத்து அவரது மகன்கள், மருத்துவர்களிடம் தனது தந்தையை டிஸ்சார்ஜ் செய்யுமாறு கூறியுள்ளனர்.
சில மணி நேரத்திலேயே மருத்துவர்கள் அவருக்கு உடல்நிலை மோசமாக உள்ளதாகவும், பிளாஸ்மா வாங்கிவர வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இக்கட்டான சூழ்நிலையில் ரூபாய் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பணம் செலுத்தியுள்ளனர்.
மருத்துவர்கள் சிறிது நேரத்திலேயே அவரது உயிர் பிரிந்து விட்டதாக மகன்களிடம் தெரிவித்தனர். இதைதொடர்ந்து அவர்கள் மருத்துவர்களின் செயலை கண்டித்து மருத்துவமனை வளாகத்தில் மருத்துவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் சம்பவ இடத்திற்கு வந்து அவரது மகன்களிடம் நடந்த சம்பவங்களை கேட்டு அறிந்து மருத்துவமனை நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
நன்றாக இருந்த தங்கள் தந்தையை, கட்டிப்போடும் தரமற்ற மருத்துவ சிகிச்சை அளிக்கும் இம்மருத்துவமனையில் நாள்தோறும் பலர் இறப்பதாகவும், சிகிச்சை அளிக்க போதிய அனுபவமில்லாத மருத்துவர்களையே இங்கு பயன்படுத்துவதாகவும் அவரது மகன்கள் குற்றம் சாட்டியுள்ளனர்