/* */

மின்சாரம் தாக்கி மின்சார வாரிய ஊழியர் உயிரிழப்பு

காஞ்சிபுரம் அடுத்த துலுக்கும்தண்டலம் கிராமத்தில் மின் மாற்றியதில் மின் இனைப்பு பழுது நீக்கிய போது இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

HIGHLIGHTS

மின்சாரம் தாக்கி மின்சார வாரிய ஊழியர் உயிரிழப்பு
X

காஞ்சிபுரம் அருகே திருப்புட்குழி பகுதியை சேர்ந்தவர் பக்கிரிசாமி (58). இவர் வெள்ளைகேட் பகுதியில் உள்ள மின்சார வாரியத்தில் பணியாற்றி வருகின்றார்

துலுக்கும்தண்டலம் கிராமத்தில் மின்இனைப்பு துண்டிக்கப்பட்டதாக பொதுமக்கள் புகார் தெரிவித்திருந்த நிலையில், துண்டிக்கப்பட்ட மின் இனைப்பை சரி செய்ய துலுக்கும்தண்டலம் கிராமத்திற்க்கு மின்சார ஊழியர் பக்கிரிசாமி மின்மாற்றியில் இருந்து மின் இனைப்பை துண்டித்துவிட்டு, மின்மாற்றி மீது ஏறி சரி செய்துக் கொண்டிருந்தார் எதிர்பாரத விதமாக மின்சாரம் தாக்கி தீ பற்றி எரிந்து துடி துடித்துபோனார்

உடனே 108 ஆம்புலன்ஸ் மற்றும் காஞ்சிபுரம் தீயனைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் ஆனால் 108 ஆம்புலன்ஸ் மற்றும் தீயனைப்புதுறை வீரர்கள் வருவதற்குள் மின்சார ஊழியர் பக்கிரிசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்து வந்த பாலுசெட்டி போலீசார் மின்சாரம் தாக்கி உயிரிழந்த பக்கிரிசாமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

முதல் கட்ட விசாரணையில் மின் மாற்றியை சரியாக மின் இனைப்பை துண்டித்து செல்லாமல் மின் மாற்றி மீது பணியில் ஈடுட்டுள்ளதால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழதுள்ளார்.

படவிளக்கம் : மின்மாற்றியில் பழுது நீக்கிய போது மின்சாரம் தாக்கி எரிந்து கொண்டிருந்த மின்வாரிய ஊழியர்.

Updated On: 23 Aug 2022 4:00 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  2. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  3. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  4. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  5. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  6. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  7. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  8. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  10. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்