/* */

தேர்தல் நடத்தை விதிகளை மீறி பறந்த கட்சி கொடிகள் அகற்றம்

தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறி பல்வேறு பகுதியில் பறக்க விடப்பட்டிருந்த அரசியல் கட்சி கொடியினை பறக்கும் படை அகற்றினர்.

HIGHLIGHTS

தேர்தல் நடத்தை விதிகளை மீறி பறந்த கட்சி கொடிகள் அகற்றம்
X

பல்லவர் மேடு பகுதியில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி கட்டப்பட்ட அரசியல் கட்சி கொடிகளை பறக்கும் படையினர் அகற்றிய போது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி இரண்டு நகராட்சியில் 3 பேரூராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெற உள்ளது.

தேர்தல் நன்னடத்தை விதிகள் மாவட்டம் முழுதும் அமலில் உள்ளது. இதனை மீறுபவர்களை கண்காணிக்க கண்காணிப்பு குழுக்கள் இருபத்தி நான்கு மணிநேரமும் சுழற்சி முறையில் பணியாற்றி வருகிறது.

இந்நிலையில் பல்லவர் மேடு பகுதியில் பல்வேறு குடியிருப்பு மற்றும் கட்சி அலுவலகங்களில் தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறி அரசியல் கட்சிக் கொடிகள் கட்டப்பட்டு இருப்பதாக புகார் எழுந்த நிலையில் அவ்வழியாக வந்த பறக்கும் படையினர் இதனைக் கண்டு அங்குள்ள நபரிடம் கூறி அதனை அகற்றுமாறு கூறினர்.

பறக்கும் படை கண்காணிப்பு குழுவினர் முன்னிலையிலேயே கட்சி கொடிகள் அகற்றப்பட்டு அவர்களுக்கு தேர்தல் நன்னடத்தை விதிகளை கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.

Updated On: 14 Feb 2022 3:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  2. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  3. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  4. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  5. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  8. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  9. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  10. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு