காஞ்சிபுரத்தில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த திமுக வேட்பாளர்
18வது வட்டத்தில் வாக்களித்த வாக்காளர்களுக்கு வீடுகள் தோறும் சென்று நன்றி தெரிவித்த திமுக வேட்பாளர் மல்லிகா ராமகிருஷ்ணன்
HIGHLIGHTS
நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தல் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் தங்கள் பகுதிகளில் வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பணியினை தொடங்கியுள்ளனர்.
அவ்வகையில் 18 வார்டு பகுதியில் போட்டியிட திமுக வேட்பாளர் மல்லிகா ராமகிருஷ்ணன் 707 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
தனது வார்டு பகுதியில் வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பணியினை தனது வீட்டில் இருந்து தனது ஆதரவாளர்களுடன் வர்த்தக அணி செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் துவக்கி வைகுண்ட பெருமாள் வீதி, கவரைதெரு, பேருந்து நிலையம், மதுராந்தோட்டதெரு, நடுத்தெரு உள்ளிட்ட பல பகுதிகளில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
வெற்றி பெற்ற வேட்பாளருக்கு வீதிகள் தோறும் சால்வை , மலர்மாலை அணிவித்து வரவேற்றனர். மதுராந்தோட்டம் பகுதியில் அமைந்துள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் சில குறைகளை தெரிவித்த நிலையில் உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
இந்த நன்றி அறிவிப்பு நிகழ்வில் வட்ட செயலாளர்கள் திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.