காஞ்சிபுரம் மாநகராட்சியில் கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்
காஞ்சிபுரம் மாநகராட்சி கொசு ஒழிப்பு பணியில் ஊழியர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்
HIGHLIGHTS
நவம்பர் மாதத்தில் பெய்த வடகிழக்கு பருவமழையால் தேங்கி நிற்கும் நீரில், கொசு உற்பத்தியாகும். இதனால் டெங்கு , மலேரியா உள்ளிட்ட நோய்கள் பரவும். இதனை ஆரம்பித்திலேயே அழிக்கும் பணிகளை மேற்கொண்டால் மட்டும்,ஏ, கட்டுபடுத்துலாம். இதற்காக பல ஆயிரம் நகராட்சி ஊழியர்கள், வீடுகள் தோறும் சென்று ஆய்வு மேற்கொண்டு இப்பணியினை செய்து வருகின்றனர்.
கடந்த மாதம் பெய்த கனமழை காரணமாக காஞ்சிபுரம் மாநகராட்சி எல்லைப்பகுதியில் நீர்த்தேக்கமின்மை காரணமாக கொசு அதிகளவில் உற்பத்தியாகி, பொது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், குறிப்பு கொசு ஒழிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டுமென வந்தது. தொடர் புகார்கள் வந்தன. இதையடுத்து மாநகராட்சி ஆணையர் நாராயணன், கொசு ஒழிப்பு பணிகள் மண்டல வாரியாக ஊழியர்களை நியமித்து, மாலை நேரங்களில் வாகனங்களில் புகைப்போக்கி மூலம் கொசு ஒழிப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளார்.