போதை பொருட்களை ஒழிக்க வலியுறுத்தி பாமக சார்பில் காஞ்சிபுரத்தில் ஆர்பாட்டம்
PMK News - காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்தில் பாமக சார்பில் 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
HIGHLIGHTS
PMK News - தமிழகத்தில் போதை பொருட்களால் இளைஞர்கள் , பள்ளி , கல்லூரி மாணவர்களிடையே தற்போது போதை பொருட்கள் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது.இதனை முற்றிலும் ஒழிக்க வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்திருந்தார்.
அதன் தொடர்ச்சியாக காஞ்சிபுரம் மாவட்ட பா.ம.க செயலாளர் பெ.மகேஷ்குமார் தலைமையில் காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில தேர்தல் குழு பணி செயலாளர்கள் மீ.க.செல்வகுமார் மற்றும் இசக்கிபடையாச்சி ஆகியோர் கலந்து கொண்டு போதை பொருட்களினால் ஏற்படும் தீமைகள் , மேலும் அதனை தமிழக அரசு முற்றிலும் ஒழிக்க வலியுறுத்தி சிறப்புரையாற்றினர்.
மேலும் மது ஒழிப்பு பிரசார பாடலை பாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அதனைத் தொடர்ந்து போதை பொருட்களை முற்றிலும் ஓழிக்க வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மேற்கு மாவட்ட தலைவர் உமாபதி , கிழக்கு மாவட்ட செயலாளர் அரிகிருஷ்ணன், செவிலிமேடு செல்வராஜ் மற்றும் பாமக நிர்வாகிகள் , மகளிர் அணியினர் , தொண்டர்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2