/* */

காஞ்சிபுரத்தில் கொரோனா சிகிச்சை பலனின்றி ஓரே நாளில் 12 பேர் உயிரழப்பு

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் 12 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில் கொரோனா சிகிச்சை பலனின்றி  ஓரே நாளில் 12 பேர் உயிரழப்பு
X

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே வருகிறது. நேற்று ஓரே நாளில் 836 பேர் பாதிக்கப்பட்டு பல்வேறு நிலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று வரை 3399 பேர் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். குறிப்பாக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அதிக அளவில் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காஞ்சிபுரம் அரசு பொது மருத்துவமனையில் தற்போது கூடுதலாக ஒரு கட்டிடத்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தாலும், நேற்று ஒரே நாளில் 12 பேர் தொடர்ந்து உயிரிழந்த சம்பவம் காஞ்சிபுரம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் போதிய செவிலியர்கள் குறைபாடு மற்றும் கூடுதல் மருத்துவர்கள் நியமனம் , மருந்துகள் பற்றாக்குறை என பல குறைகளை மாவட்ட ஆட்சியரிடம் மருத்துவமனை நிர்வாகிகள் முறையாக தெரிவிப்பதில்லை.

நேற்று செய்தியாளர் சந்திப்பில் இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் செய்தியாளர்கள் முறையிட்டபோது மருத்துவமனை நிர்வாகிகள் பதிலேதும் கூறாமல் மௌனமாக நின்றனர்.

Updated On: 7 May 2021 10:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  2. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  4. வீடியோ
    🔥 Delhi-யில் அடித்த Annamalai அலை!😳 மிரண்டுபோன BJP தலைமை |...
  5. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  6. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  7. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  8. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  9. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
  10. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...