/* */

காஞ்சிபுரத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு
X

தமிழகத்தில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, இன்று முதல், இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தவுள்ளது. மேலும் அனைத்து மாவட்ட ஆட்சியருக்களுக்கும் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தி நடவடிக்கைகளை கண்காணிக்க உத்தரவிடபட்ட து.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த ஒன்றாம் தேதி 35 நபர்களும், இரண்டாம் தேதி நாற்பத்தி ஏழு நபர்களும் என இருந்த நிலையில், நேற்று ஒரே நாளில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 127 நபர்கள் தொற்று பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். காஞ்சிபுரம் ஒன்றியத்தில் 11 பேர்களும், மாநகராட்சி பத்து நபர்களும், ஸ்ரீபெரும்புதூரில் 18 நபர்களும், குன்றத்தூரில் 79 நபர்களும், உத்திரமேரூரில் ஒரு நபரும் இதர 8 பேர் என மொத்தம் 127 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு போடப்பட்டு வந்தாலும் ஒரே நாளில் இரு மடங்குக்கு மேலாக வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டுள்ளது காஞ்சிபுரம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று முதல் வருவாய்த்துறை மற்றும் காவல்துறை , மாநகராட்சி ஊழியர்கள் என பல துறையினர் முக கவசம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

Updated On: 6 Jan 2022 7:00 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்