/* */

காஞ்சிபுரத்தில சுதந்திர தினவிழா கலெக்டர் ஆர்த்தி தேசிய கொடி ஏற்றினார்

காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தேசிய கொடியை ஏற்றிவைத்து, ரூ 49 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில சுதந்திர தினவிழா கலெக்டர் ஆர்த்தி தேசிய கொடி ஏற்றினார்
X

காஞ்சிபுரத்தில் கலெக்டர் ஆர்த்தி தேசிய கொடியேற்றி வீர வணக்கம் செலுத்தினார்.

இந்திய திரு நாட்டின் 75வது பொன்விழா சுதந்திர தின விழா நாடெங்கும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமைந்துள்ள அண்ணா காவல் அரங்கத்தில் தேசியக் கொடியினை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

அதன்பின் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம் சுதாகர் தலைமையிலான காவல்துறை அணிவகுப்பை மரியாதையை ஏற்றுக்கொண்டு, சுதந்திர தின விழாவையொட்டி வண்ண பலூன்கள் மற்றும் சமாதானப் புறாக்களை பறக்க வைத்தார்.

மேலும் பல்வேறு அரசுத் துறைகள் மூலமாக 76 பயனாளிகளுக்கு ரூ 49.33 லட்சம் மதிப்பிலான நல திட்ட உதவிகளை வழங்கினார்.

கொரோனா காலகட்டத்தில் முன் களப்பணி அலுவலர்களாக பணியாற்றியவர்களுக்கு பூங்கொத்து , இனிப்புகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்.

இவ்விழாவில் காஞ்சிபுரம் சரக காவல்துறை துணைத் தலைவர் எம். சத்யபிரியா மாவட்ட வருவாய் அலுவலர் இரா.பன்னீர்செல்வம் மற்றும் அரசு அலுவலர்கள் பங்குபெற்றனர்.

Updated On: 16 Aug 2021 3:51 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  2. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  3. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  4. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  5. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  6. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  7. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  8. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  9. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...
  10. கல்வி
    +2 க்கு பிறகு அடுத்தது என்ன? சாதித்து காட்டுவோம்!