Begin typing your search above and press return to search.
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் முதியோர்களை குறி வைக்கும் வேட்பாளர்கள்
காஞ்சிபுரம் மாவட்ட ஊரக உள்ளாட்சி முதல் கட்ட வாக்குப் பதிவில் கிராமத்தில் உள்ள முதியோர்களை குறி வைத்து அழைத்து வந்து வாக்குப்பதிவு செய்து வருகின்றனர் வேட்பாளர்கள்.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் முதல் கட்ட வாக்குப் பதிவு இன்று காலை 7மணிக்கு துவங்கியது. இதில் ஆர்வமுடன் வாக்களிக்க ஆண்கள் பெண்கள் என வாக்குச்சாவடிகளில் குவிந்து வருகின்றனர்.
இதில் குறிப்பாக கிராமங்களில் உள்ள முதியோர்களை வேட்பாளர்கள் குறி வைத்து அழைத்துச் சென்று அவர்களுடன் சென்று வாக்களித்து வருகின்றனர்.
இதில் முதியோர்களை அழைத்து செல்வதாக கூறி வாக்கு அறையில் இவர்களை வாக்குச்சீட்டு பெறும்வரை உதவி செய்து அதன்பின் இவர்கள் வாக்கு செலுத்துகின்றனர்.
இதனால் இவர்களுக்கு தேவையான வாக்கு பெறுவதில் சிரமம் இல்லை என்பதால் இதில் ஆர்வம் காட்டுகின்றனர்.