பெரியார் பல்கலைக்கழகம் மீது நடவடிக்கை எடுக்க கோரி பா.ஜ.க. மனு
காஞ்சிபுரம் மாவட்ட பா.ஜ.க. பட்டியல் இன அணி சார்பாக எஸ்.பி அலுவலகத்தில் பெரியார் பல்கலைக்கழகம் மீது புகார் மனு அளித்தனர்
HIGHLIGHTS
காஞ்சிபுரம் மாவட்ட பா.ஜ.க. பட்டியலின அணி மாவட்ட தலைவர் சிலம்பரசன் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளித்தனர்.
இதில் சேலத்தில் அமைந்துள்ள பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற செமஸ்டர் தேர்வில், எம். ஏ. வரலாற்று துறை மாணவர்களுக்கு கேட்கப்பட்ட வினாத்தாளில், தமிழ்நாட்டில் உள்ள தாழ்த்தப்பட்ட சாதி எது என கேட்கப்பட்டு அதற்கான நான்கு பதில்களில் ஒன்றை தேர்ந்தெடுக்குமாறு வினா அமைந்து உள்ளது
இது சாதிய ஆவண போக்கினை வெளிப்பாடு காட்டுவதாகவும் , பட்டியல் சமூகத்தில் சாதிப் பெயர்களை சொல்வது குற்றமாக்கப்பட்டுள்ளது.இச்சூழலில் பெரியார் பெயரில் நடைபெறும் பல்கலைக்கழகத்தில் இவ்வாறான கேள்வி கேட்டது கண்டிக்கத்தக்கது.
எனவே பல்கலைக்கழகத்தின் மீது வழக்கு தொடர வேண்டும். திராவிட மாடல் அரசு எனக் கூறும் தி.மு.க. சமூகநீதியை காற்றில் பறக்க விட்டுள்ளது.எனவே பாரதிய ஜனதா கட்சியின் பட்டியலின அணி சார்பில் பெரியார் பல்கலைக்கழக நிர்வாகத்தின் மீது வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்ய வேண்டும்.
இதுபோன்று இனிவரும் காலங்களில் பல்கலைக்கழகங்கள் இதுபோன்ற கேள்விகளை கேட்டு மாணவர் இடையே சாதி உணர்வை தூண்ட வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இந்நிகழ்வின் போது மாவட்ட துணைத் தலைவர் செந்தில்குமார் , மாவட்ட பொது செயலாளர் வாசன் உள்ளிட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் உடன் இருந்தனர்.